Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாப்பாட்டுக்கு கூட வழியில்ல… கடிதம் அனுப்பிய தொழிலாளர்கள்… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள்,  அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மண்டல தலைவர், மண்டல செயலாளர் மற்றும் துணை செயலாளர் ஆகியோர் ஒன்று சேர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |