Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாளில் 18 பேர் பலி…. நோய் தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரம்…. ராணிப்பேட்டையில் வேகமாக பரவும் கொரோனா….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 544 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 544 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தினுடைய நிர்வாகத்தின் சார்பாக நோய்த்தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Categories

Tech |