Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அமலுக்கு வந்தது…. மக்களே இனி அவ்வளவு தான்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ 95.51 க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ 89.65 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. விரைவில் பெட்ரோல் விலை ரூபாய் 100 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |