கோவையை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், பாவனா தம்பதிகள் தங்கள் சார்பில் 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிதி உதவியாக வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன உரிமையாளர்களும் உதவித்தொகை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் பலரும் பொருள்களாகவும் தங்களது உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த நரேன் கார்த்திகேயன் மற்றும் பாவனா தம்பதியினர் தங்கள் சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சி மீட்டர் மற்றும் முக கவசங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம், அவரது ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர்.