பெங்களூரு மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாடகையாக 10 ஆயிரம் ரூபாயை கொடுக்காததால் இறந்தவரின் உடலை நடைபாதையில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். பின்னர் அவரின் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மின் மயானத்திற்கு கொண்டு வந்தனர். மின் மயானம் அருகே வைத்து இறந்தவரின் மனைவியிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் 10,000 தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் தன்னிடம் 3000 ரூபாய் இருப்பதாகவும் மீதி ரூபாயை யாரிடமாவது வாங்கி தருவதாகவும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பத்தாயிரம் ரூபாய் தான் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்தது மட்டும் இல்லாமல், உடலை மயானத்தின் அருகே நடைபாதையில் வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அம்ருதஹல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.