Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப் போகும் தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென் மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் வட மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமொரின் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத் தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |