Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்… கீழே விழுந்த ஹோட்டல் உரிமையாளர்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஞானபிரகாஷ்(55) என்பவர் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் ஞானபிரகாஷ் ஈரோடு சாலையில் உள்ள வேளாண் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் வேகத்தடையில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து தலையில் பலத்த காயமடைந்த ஞானப்பிரகாச அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |