தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பலனாக கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் 2ஆம் அலை தாக்கத்தில் இருந்து ஓரிரு வாரங்களில் மீளலாம் என தமிழக அரசு மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் தந்து வருகிறது. மேலும் தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.