தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்போஸ்ட் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தை மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுவதற்காகவும், மத்திய அரசாங்கத்தை கண்டித்தும் நடத்தினர். மேலும் இவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் இப்போராட்டத்தை நடத்தினர். மேலும் இப்போராட்டத்திற்கு மாவட்ட குழுவினுடைய உறுப்பினரான நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார்.