தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.
இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 50 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் டெண்டரில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கான மனு இன்று மதியம் அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.