ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் , ஜப்பானில் நுழையும் போதே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ,கடந்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு செல்ல பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . குறிப்பாக இலங்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை சமீபத்தில் 4 ம் நிலை பயணக் கட்டுப்பாடு ஆலோசனையை வெளியிட்டது. இந்த பயண கட்டுப்பாட்டல், நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது, என்று அமைப்பு குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை அதிகாரியான சிய்கோ கூறும்போது, அமெரிக்காவின் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு எந்த விதத்திலும் ஒலிம்பிக் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. போட்டி நடத்துவதற்கான ,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை நிபுணர்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ,ஜப்பான் நாட்டிற்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என்று கூறினார்.