Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள்…? வெளியான அதிரடி தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கை அந்தந்த மாநில முதல்வர்கள் நீட்டித்து அறிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் சில முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |