இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நேற்று மதுரையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளதாலும் நேற்று இரவு வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் நேற்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வாகன நெரிசலால் மக்கள் சிக்கித் தவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் அலட்சியம் செய்து விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக் குறியாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.