இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக, 2 இந்திய அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாடுகின்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வரும் ஜூன் 18 முதல் 22 தேதி வரை விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடக்கும் ,டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் விராட் கோலி ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் ஜூலை 13ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இலங்கையில் விளையாடவுள்ள இந்திய அணியின், கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. இலங்கையில் விளையாட உள்ள இந்திய அணி, வரும் ஜூலை 5-ஆம் தேதி இலங்கைக்கு புறப்படுகிறது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . அத்துடன் இந்த தொடரில் விளையாட உள்ள, இந்திய அணி பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். இந்தத் தொடரில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தைப் பின்பற்றி, தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்களின் தனிமைப்படுத்துதல் முடிந்தபிறகு இலங்கைக்கு புறப்படுவார்கள், என்றும் கூறப்படுகிறது . அத்துடன் இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.