Categories
மாநில செய்திகள்

காவல்துறைக்கு ஊக்கத்தொகை வேண்டும்…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இழப்பு எண்ணிக்கையும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 36 காவல்துறை குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வரவேற்பு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறையில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |