முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கீரணிப்பட்டியில் இருக்கும் குளத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை பகுதியில் வசித்துவந்த பிச்சைமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக பிச்சைமணி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிச்சைமணியின் சகோதரர் முருகையன் என்பவரையும் கொலை செய்துள்ளனர்.
அதற்கு முன்பாக முருகையன் தனக்கு சொந்தமான ஒரு சரக்கு வேனை தனது மருமகனான மகேந்திர பாபு என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து முருகையன் கொலை செய்யப்பட்ட பிறகு அவரது மனைவியான மணிமேகலை தன் கணவர் கொடுத்த சரக்கு வேனை திருப்பி தருமாறு மகேந்திர பாபுவிடம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மகேந்திரபாபு தனது உறவினரான கார்த்திக், மகேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து முருகையனின் சகோதரனான பிச்சைமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து பிச்சைமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் கோபம் அடைந்த 3 பேரும் இணைந்து பிச்சைமணியை கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.