Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு மாறியே தெரியல… உரிய நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவடத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாலையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் காலையில் வாகனங்கள் அணிவகுத்து வரிசையில் நின்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முக்கிய பகுதிகளில் கூடுதலாக காவல் துறையினர் பணி செய்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்றும் அப்போதுதான் முழு ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் அதனால் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |