காரில் 300 மதுபாட்டில்களை கடத்தி வந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் எம். மலப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் நாகராஜன் என்பவர் தன்னுடைய காரில் 300 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த 300 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.