Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோஜாபூ கொடுக்குறாங்க… இப்படி கூட சொல்லலாம்… எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர்…!!

வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் ரோஜா பூ கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி ரோஜாப்பூ வழங்கியதோடு, அவர்களை தேவை இல்லாமல் வெளியே வர கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |