டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அவருடைய நண்பர்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.