தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மேலும் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தான் அதிகரித்து வருகிறது. இதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் Covid-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்கவில்லையென்றால் உதவி செய்ய தமிழக அரசின் “கோவிட் அறக்கட்டளை அறை” செயல்படுகிறது. இந்த உதவியை பெற இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் அதிகாரிகள் உங்களுக்கு உடனடியாக உதவி செய்வார்கள்.