Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் மணல் திருட்டு.. தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை காவல் துறையினர்  தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சூசை என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து மணலுடன் மாட்டு வண்டியை  பறிமுதல் செய்த காவல் துறையினர் மணல் கடத்தியதற்காக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |