Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – புதிய தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் பொதுமக்கள் பொருட்களை வாங்க தினமும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. தேவையின்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை பாயும். மளிகை பொருட்கள், காய்கறிகளை வீட்டின் அருகே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |