Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுனால சிரமமா இருக்கு..! புதுசா அமைச்சு குடுங்க… வாடிக்கையாளர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் புதிய ஏ.டி.எம். இயந்திரம் அமைத்து தருமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராம பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காளிங்கராயநல்லூர், வசிஸ்டபுரம், அத்தியூர், வயலூர் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் கணக்கு வரவு, செலவு செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளது.

இந்த நிலையில் அந்த ஏ.டி.எம் இயந்திரம் கடந்த சில மாதங்களாக பழுதாகியுள்ளது என்று கூறி அதனை அங்கிருந்து எடுத்து சென்றுவிட்டார்கள். இதனால் பொதுமக்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் ஏ.டி.எம் மையம் பூட்டப்பட்டுள்ள காரணத்தால் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக வங்கி நிர்வாகம் பணம் செலுத்த, பணம் எடுக்க வசதியாக புதிய ஏ.டி.எம் எந்திரத்தை அமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Categories

Tech |