Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்… உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் என்று தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது அதிக அளவு நடந்து வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து வெளிப்படையான தகவல்கள் எதுவும் இல்லாத சூழலில், தடுப்பூசி எடுத்துக்கொள்வதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் என்று இதுதொடர்பாக மத்திய அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |