Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

FLASHNEWS: முழு ஊரடங்கு, 144 தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை.

எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி செயல்படும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தென்காசி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமிரன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவை இன்றி மளிகை, காய்கறி, தேனீர் மற்றும் உணவகங்களில் கூடி அமர்ந்து பேசுவதை தவிர்க்குமாறும், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |