Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல்…. ஆக்சிஜன் விநியோகம் ஆரம்பம்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்குவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு, மின்சாரமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்கு நேற்று இரவு முதல் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று ஆக்சிஜன் விநியோகம் தொடஙங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |