Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. ஆனால் இன்னும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மீண்டும் ஒரு வாரம் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த உத்தரவு வருகின்ற மே 18ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் 36 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |