நடிகை அமலாபால் மலை உச்சியில் தனது சகோதரர் மடியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். இதை தொடர்ந்து விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அமலாபால் தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். நடிகை அமலாபால் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை அமலாபால் ஒரு மலை உச்சியில் தனது சகோதரரின் மடியில் அமர்ந்து சிரித்துக்கொண்டே புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதனை அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை அமலாபாலை மலை உச்சியில் கவனமாக இருங்கள் என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.