மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் . அதிலும் சளி , இருமல் பற்றி சொல்லவே வேண்டாம் . இத்தகைய சளி மற்றும் இருமலின் போது தொண்டைக்கு இதமாக மஞ்சள் மிளகு பால் செய்து குடித்தால் நன்றாக இருக்கும் . மஞ்சள் மிளகு பால் எப்படி செய்வது ??? வாங்க பார்க்கலாம் …
தேவையான பொருட்கள்:
பால் – 2 கப்
பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி , நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். பால் காய்ந்ததும் மஞ்சள் தூள் , பனங்கற்கண்டு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து , கொதிக்க விட்டு இறக்கினால், மஞ்சள் மிளகு பால் தயார் !!!