இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதி வழங்கி பல நாடுகள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி நிர்வாகம் 30 கோடி வழங்கியுள்ளது. மேலும் என்ஜிஓ களுடன் இணைந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சேவையை வழங்கும் உதவுவதாகவும், சன் நிறுவனம் சார்ந்த அனைத்து ஊடகங்களிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் எனவும் கூறியுள்ளது.