நாம் சிலிண்டர் வாங்கும் போது அதனுடன் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் நமக்கு வந்து சேருகிறது. அது எப்படி என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
நாம் சிலிண்டர் வாங்கி அது தீர்ந்ததும் மற்றொரு சிலிண்டரை வாங்குகிறோம். அது நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அதேநேரம் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வந்து சேரும் என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறிதான். இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலிண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு வாங்குவது இல்லை.
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம். இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது கிடையாது. சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால் கூட சட்டப்படி, அந்த குடும்பம் 50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டு தொகையை பெற முடியும்