Categories
தேசிய செய்திகள்

தீடிரென வெடித்த ஜெலட்டின் குச்சிகள்… தொழிலாளர்களின் உடல் வெடித்து சிதறியது… பயங்கர விபத்தில் 10 பேர் பலி…!!

ஆந்திராவில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் நடைபெற்ற விபத்தில் 10 பேர்களின் உடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமில்லபள்ளி என்னும் கிராமத்தில் உரிமம் பெற்ற சுண்ணாம்புக்கல் குவாரி உள்ளது. இந்நிலையில் நேற்று பாறைக்கு வெடி வைப்பதற்காக பட்வெல் நகரத்தில் இருந்து வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகள் சுண்ணாம்பு குவாரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து  வாகனத்திலிருந்து குச்சிகளை அங்கிருந்த தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வாகனம் வெடித்து சிதறிய நிலையில்  தொழிலாளர்களின் உடல்களும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 10 பேர்களின் உடல் வெடித்து சிதறி உருதெரியாமல் மாறியுள்ளது. மேலும் 2 தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெடி விபத்திற்கான காரணம் என்னவென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |