தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நாளை ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பதவி ஏற்பு விழாவை திமுகவினர் வீட்டிலிருந்தே கண்டுகளிக்க வேண்டுகிறேன் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடல்நலமே முக்கியம் என்பதால் திமுகவினர் வீட்டிலிருந்தே பதவியேற்பு விழாவை கண்டு களிக்க வேண்டும். தொண்டர்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லை என்பது எனக்கு கவலை அளிக்கிறது. மக்கள் அனைவருக்கும் சம உரிமையும் கடமையும் உடைய உயர்வான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார்.