Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டே தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்றதிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக ஓய்வூதியம் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும் குடும்ப ஓய்வூதியத்திற்கான கோரிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழ் வந்தவுடன் குடும்ப ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |