கொரோனா தடுப்பூசி பார்முலாவை தர முடியாது என்று பில்கேட்ஸ் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் பலரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலீடுகள் மூலம் பெரும் பணத்தை சம்பாதிக்க பில்கேட்ஸ் நிறுவனம் முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.