Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து 231 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி தற்போது கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் 1,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |