ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டன.
இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் காவல்துறையின் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். நேற்று மாலை தொடங்கப்பட்ட இந்த சண்டை ஏறத்தாள 6 மணி நேரமாக நீடிக்கப்பட்டது.
இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்துவருகின்றது. அதில் அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.இவர்களில் ஒருவர் சோ போரின் ஹத்லாங்கூ பகுதியில் உள்ளூர் பயங்கரவாதியான வாசிம் அகமது லோனே என்பதும், இன்னொருவர் அயல்நாட்டு பயங்கரவாதியான ஹமாஸ் என்ற அஸ்ரார் என்ற சரியா என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் சரியா சென்ற 2018-ஆம் ஆண்டிலிருந்து வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.