Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

தேனியில் ஒரே நாளன்று 187 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனியில் ஒரே நாளன்று 187 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21,375 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 213 நபர்கள் சிகிச்சை முடிந்ததால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19,176 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |