Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை… ஒரே ஒரு சிகரெட்… 18 பேருக்கு பரவிய கொரோனா… அதிர்ச்சி சம்பவம்…!!

ஒரே சிகரெட்டால் 18 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் வசித்து வருபவர் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா  உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் நிறுவனத்தில் வேலை செய்யும் 17 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. இது எப்படி பரவியது என்பதை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் விசாரித்தனர்.

அப்போது மேனேஜர் மூலமாக பரவியது என்பது தெரியவந்துள்ளது. மேனேஜர் ஒரு நாள் டீ கடைக்கு சென்று டீ குடிக்கச் சென்றபோது நன்கு தெரிந்த ஒரு நபர் அங்கு வந்துள்ளார். அந்த நபர் லேசாக  இருமியுள்ளார்.  அவர் இருமிகிறார் என்பதை தெரிந்து ஒதுங்கிப் போகாமல் அவரிடமிருந்து சிகரெட்டை வாங்கி தனது சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். இதை தொடர்ந்து சில நாட்களிலேயே அவருக்கு தொற்று உறுதியாகியது. தனக்கு ஒரு சிகரெட்டை மற்றொரு நபரிடம் வாங்கி பற்ற வைத்தால் அவருக்கு பரவியதால் அவருடன் நெருங்கிப் பழகிய 17 நண்பர்களுக்கும் பரவியது தெரியவந்தது.

Categories

Tech |