சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொட ர்ந்து தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையங்கள் அனைத்திலும் மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், உள்நாட்டு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பாகவும், வெளிநாடு செல்லும் பயணிகள் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவும் விமான நிலையத்திற்கு வந்து சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.