தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து ஸ்டாலின் நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.