வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்ததையடுத்து இந்த மாதம் மே 2ஆம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணும் பணியானது நேற்று முன்தினம் முடிந்தபின் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து பத்திரமாக பூட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று 3 தொகுதிக்குட்பட்ட 890 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நாகையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.