Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து சென்ற பெற்றோர்… உள்ளே கண்ட அதிர்ச்சி காட்சி… கோவையில் நடந்த சோகம்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குழுமம்பாளையம் புதூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கடந்த 3 நாட்களாக தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து தனது அறைக்கு சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பிரசாந்த் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல்துறையினர் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |