Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். செய்தித்தாள், காட்சி மற்றும் ஒளி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார்கள். முன்கள பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |