Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகம் முழுவதும் மே 6-ஆம் தேதி முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மே 6 ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும், அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்கும் மட்டுமே அனுமதிக்கப்படும். தேனீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |