Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர், அமைச்சர்கள் பெயர் பலகைகள் அகற்றம் …. தலைமை செயலகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 232 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பிடித்துள்ளது. ஒருவர் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திமுக ஆட்சி அமைக்க உள்ளதால்,சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அறைகளை காலி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அமைச்சர்களின் பொருள்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.

Categories

Tech |