Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எரிந்த வைக்கோல் போரில் வந்த துர்நாற்றம்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… தர்மபுரியில் பரபரப்பு…!!

எரிந்து கிடந்த வைக்கோல் போரில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து விட்டனர். அதன்பின் எரிந்து கிடந்த வைக்கோல் போரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாப்பாரப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வைக்கோல் போரில் சாம்பலில் எரிந்த நிலையில் லட்சுமியின் பிணம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து வைக்கோல் போரில் போட்டு தீ வைத்தனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |