தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணி 150 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காலை முதலே பல்வேறு இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 100 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்ற நிலையில் தற்போது 15 இடங்களுக்கு மேல் பின்னடைவை சந்தித்துள்ளது. பின்னடைவு ஏற்பட்டுள்ள இடங்களெல்லாம் முக்கிய அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள். இதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி உள்ளது.