Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை மதுரவாயல் துறைமுகம் ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மதுரவாயல், துறைமுகம் பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |